நான் தான் உங்கள் காவிரி பேசுகிறேன்
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா..... நியாபகம் இருந்தால் கட்டாயம் நீங்கள் என்னை அருந்திருப்பிர்கள்.... உங்களுக்காக நான் வற்றாமல் சென்று கொண்டு இருந்தேன். என்மீது அணை கட்டினீர்கள் குடிப்பதற்க்க என்றிகள் நான் கட்டு பட்டு நின்றேன் என்னை வைத்து அரசியல் செய்திர்கள் விட்டு விட்டேன். என் பேரில் பெண்மை இருந்தன் காரணமோ என்னவோ பிறக்க ஒரு ஊர் இறக்க ஓர் என்றகிவிட்டேன்.
பிறந்த காரணத்தினால் கர்நாடத்திற்கோ வளர்க்க பட்ட காரணத்தினால் நான் தமிழ்நாட்டிற்கோ சொந்தம் இல்லை தாகம் உள்ள அனைவருக்குமே நான் பொது தான். தயவு செய்து என்னை வைத்து சண்டை போட்டு கொள்ளாதீர்கள். பின்பு கழிவு நீர்களை என்னுடன் கலந்திர்கள் பொறுத்து கொண்டேன்.
அணை கட்டிய காரணமோ என்னவோ என்னை மலட்டு தன்மை ஆகி மணல் கொள்ளை என்ற பெயரில் என் உடலை திருடி கொண்டு இருக்கிறீகள். பின்னர் எண்ணில் ஆள் துளை இட்டு ஊறிய செய்கிறீர்கள். அதையும் பொறுத்து கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் மணல் கொள்ளை நடத்திய காரணமோ என்னவோ என்னுள் 10 முதல் 15 அடியில் இருந்த நான் இன்று 40 அடியை தொட்டு விட்டேன். இனி வ்ரும் காலங்களில் 100 அடிக்கு சென்றால் கூட என்னை கண்டு பிடிக்க முடியாமல் போய் விடுவேன் .
இப்படியே சென்றால் நான் உங்களுக்கு தேசிய நெடுச்சாலையாக மட்டுமே செயல் படுவேன் என்று கூறி விட்டு செல்கிறேன்.
என்னை இனியாவது காப்பாற்றுங்கள் இல்ல விட்டாள் நான் காட்சி பொருள் ஆகிவிடுவேன். மணல் எடுப்பதை நிறுத்துங்கள் இல்லை என்றல் என்னை உரிவதை நிப்பாட்டுங்கள்.
நான் தன் காவேரி பேசுகிறேன் என்னை காப்பாற்றுங்கள்.
நான் உங்களது அடுத்த தலைமுறைக்கும் தாகம் தணிக்க விரும்புகிறேன் ....
கண்ணீருடன் காவிரி.......................
Comments
Post a Comment